முல்லைப் பெரியாறு அணையில் மழை: கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி!
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த பல நாள்களாக அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை. அதனால் அணைக்குள் நீர் வரத்து இல்லை. ஆனால், தமிழக பகுதிக்கு குறைந்த அளவிலான கனஅடியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழை பெய்யாததாலும், தொடர்ந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 7.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 1.2 மி.மீ. மழையும் பெய்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பெரியாறு அணையில் 36.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மி.மீ., மழையும் பெய்தது. அணைப்பகுதியில் மழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.45 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152 அடி) நீர் இருப்பு 2,168 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 51.39 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 256 கன அடியாகவும் இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.