முகப்பு
இந்தியா

கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள்! மாநில தலைவருக்கு நிதின் நபின் சம்மன்!

கர்நாடக மேலவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்தது குறித்து...

Updated On : 19 ஜூன் 2026, 6:56 pm IST
கர்நாடக பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின்... - கோப்புப் படம் | ANI
பகிர்:

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பாவை நேரில் சந்திக்குமாறு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சம்மன் அனுப்பியுள்ளார்.

கர்நாடகத்தில் 7 மேலவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் 5 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகத்தின் புதிய முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான அரசுக்கு இது முதல் வெற்றியாகப் பதிவாகியுள்ளது.

இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சியான பாஜக வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. இதில், பாஜக மற்றும் ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிமாறி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 140 வாக்குகள் மட்டுமே கிடைக்க வேண்டிய நிலையில், 151 வாக்குகள் பெற்றிருப்பது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதன்மூலம், பாஜகவின் 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஜனதா தளத்தின் 8 உறுப்பினர்கள் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கு கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பாவை வரும் ஜூன் 23 ஆம் தேதி நேரில் வந்து சந்திக்குமாறு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சம்மன் அனுப்பியுள்ளார்.

இதுபற்றி, விஜயேந்திர எடியூரப்பா கூறுகையில், கட்சிமாறி வாக்களித்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

summary

BJP National Leader Nitin Nabin has sent a summons to Karnataka BJP leader Vijayendra Yediyurappa, asking him to meet in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments