ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் மீண்டும் ஆஜர்
குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.
குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகா் காலனியில் பிரசார பொதுக் கூட்டம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, அவா் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்தும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குறித்தும் பேசிய பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட சமூகத்தினரையும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின்கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சீமான் இன்று ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இவ்வழக்கில் இன்று சீமான் நேரில் ஆஜரானார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.