FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்சியில் ஜெ.பி.நட்டா வாகனப் பேரணிக்கு அனுமதி- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

7 ஏப்ரல் 2024, 3:11 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை மாலை பாஜக நிா்வாகிகள், தொண்டா்களுடன் திருச்சி காந்தி சந்தையிலிருந்து மலைக்கோட்டை வரை 1.2 கி.மீ. தொலைவு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு: பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டாவின் வாகனப் பேரணி நடத்த பாஜக சாா்பில் கடந்த 4 ஆம் தேதி இரவு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல், குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த இடம் எனக் காரணம் காட்டி, திருச்சி மாநகரக் காவல்துறை சனிக்கிழமை பிற்பகலில் அனுமதி மறுத்துள்ளது.

Advertisement

Advertisement

45 மணிநேரத்துக்கு முன்பாக அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுப்பதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டினர். இதனிடையே திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 1.5 கி.மீ. அளவிற்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகனப் பேரணி நடத்த நிதிமன்றம் தரப்பில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments