முகப்பு
தமிழ்நாடு

ஆனைமடுவு அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் செய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 1:54 PM
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் தோற்றம்.
பகிர்:
Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 1:02 PM

வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் செய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் முதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 1:51 PM

இதனால், அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று போன நிலையில், வரலாறு காணாத அளவுக்கு சுட்டெரித்த கோடை வெப்பத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மே மாதம் வரை அணையில், 10.60 அடியில், 12.87 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே குட்டை போல சேறும் சகதியுமாக தேங்கிக் கிடந்தது. இதனால், கவலையடைந்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 1:51 PM

இதனையடுத்து இந்த மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 30.84 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இன்று காலை நிலவரப்படி 46.64 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று 39 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதால், அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு 127 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணை பகுதியில் மட்டுமின்றி, குறிச்சி, கோணஞ்செட்டியூர், ரங்கனூர் கோலாத்துக்கோம்பை, கீரப்பட்டி, கண்கட்டிஆலா, சின்ன குட்டிமடுவு, பெரியகுட்டிமடுவு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. பருவமழை துவங்குவதற்கு முன்பே, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் அணை பாசன விவசாயிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.