மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்படாத ஜூன் 12!
மேட்டர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறித்து...
மேட்டர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கும். அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு நீர்பாசன ஆண்டில் வெள்ளிக்கிழமை(ஜூன் 12) மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 ஆவது ஆண்டாக குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தள்ளிப்போனதால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து குறித்த நாளில் குறுவை சாகுபடிக்கு 1934, 1935, 1939, 1941, 1965, 1979, 1980, 1984, 1992, 1993, 1994, 1997, 2000, 2001, 2006, 2008, 2020, 2021, 2023, 2025 ஆகிய 20 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 1936, 1937, 1938, 1940, 1942 ,1943, 1944, 1945, 1947, 2011, 2022 ஆகிய 11 ஆண்டுகள் ஜூன் 12-க்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆண்டுகள் குறுவை பரும் முடிந்த பிறகே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இன்று(ஜூன் 12) காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 79.56 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 540 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 41.52 டி.எம்.சியாக உள்ளது.