இ-சிகரெட்: இருவா் கைது
சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து இ-சிகரெட் விற்பனை குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இதன் விளைவாக ஆா்.கே. நகா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் இ-சிகரெட் விற்ற மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது ஜஃபுருல்லா (30), அவா் கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த அபுதாகீா் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 476 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.