கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு!! இன்றுமுதல் அமல்

தமிழகத்தில் பால், தயில் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...

DIN

தமிழகத்தின் நான்கு முன்னணி பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளன. உயர்த்தப்பட்ட விலைப் பட்டியல் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நான்கு நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன.

ஆனால், பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் உயர்த்தவில்லை.

திருமலை நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூ. 58-ல் இருந்து ரூ. 62 ஆகவும், முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 66-ல் இருந்து ரூ. 70 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதே நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 36 ஆகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் ரூ. 31-ல் இருந்து ரூ. 33-ஆகவும், 950 மில்லி பால் ரூ. 62-ல் இருந்து ரூ. 64 ஆகவு உயர்த்தப்பட்டுள்ளது.

டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி ரூ. 70 ஆகவும், சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி 62 ஆக விற்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் பால் நிறுவனம் தரப்படுத்தப்பட்ட பால் விலையை லிட்டருக்கு ரூ. 5, முழு க்ரீம் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாத சூழலில், அத்தியாவசியப் பொருள்களான பால், தயிர் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT