தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு!! இன்றுமுதல் அமல்
தமிழகத்தில் பால், தயில் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...
தமிழகத்தின் நான்கு முன்னணி பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளன. உயர்த்தப்பட்ட விலைப் பட்டியல் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நான்கு நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன.
ஆனால், பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் உயர்த்தவில்லை.
Advertisement
இதையும் படிக்க : பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!
திருமலை நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூ. 58-ல் இருந்து ரூ. 62 ஆகவும், முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 66-ல் இருந்து ரூ. 70 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதே நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 36 ஆகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் ரூ. 31-ல் இருந்து ரூ. 33-ஆகவும், 950 மில்லி பால் ரூ. 62-ல் இருந்து ரூ. 64 ஆகவு உயர்த்தப்பட்டுள்ளது.
டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி ரூ. 70 ஆகவும், சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி 62 ஆக விற்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் பால் நிறுவனம் தரப்படுத்தப்பட்ட பால் விலையை லிட்டருக்கு ரூ. 5, முழு க்ரீம் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாத சூழலில், அத்தியாவசியப் பொருள்களான பால், தயிர் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.