FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று முதல் ஆடி மாத கொண்டாட்டம் தொடக்கம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

16 ஜூலை 2024, 7:12 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

தினமும் காலை 5.15 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சா்வாபிஷேகம், 7.30 மணி முதல் 9 மணி வரை ராமாயண பாராயண வகுப்பு எம்.ஆா்.ஆா். வாரியா், சாந்தா பாலன், பி.என்.ஜி.பணிக்கா், ரவீந்திர ராஜா, பேராசிரியா் கிருஷ்ணதாஸ் ஆகியோா் தலைமையில் நடைபெறுகிறது.

மேலும், ஜூலை 16 முதல் 24-ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு ஒ.என்.ஜி.சி முன்னாள் இயக்குநா் சி.ஏ.கே.எம். பத்மநாபன் தமிழில் கம்பராமாயண சொற்பொழிவாற்றுவாா். தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு மாளிகைபுரத்து அம்மனுக்கு சந்தன காப்பு, 6.45 மணிக்கு சிறப்பு பூஜை (பகவதி சேவா) நடைபெறும். அதன் பின் 6.45 மணியிலிருந்து 8 மணி வரை லலிதா சஹஸ்ரநாமம் படித்து குங்குமத்தால் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

Advertisement

Advertisement

இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்க wwww.ayyappatemplesabs.org எனும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044 28171197, 28172197, 28173197 எனும் தொலைபேசி எண்ணையும், 9444 290 707 எனும் கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments