தமிழ்நாடு

ஆலங்குளத்தில் குருத்தோலை பவனி!

ஆலங்குளத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

DIN

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை சாம்பல் புதனுடன் தொடங்கியது . இதிலிருந்து எழு வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிககளில் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா ' என்று முழுங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

இதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் நல் மேய்ப்பர் தேவாலய சபை மக்கள் திரளானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர்.

சேகர தலைவர் காலேப் சாமுவேல், சபை ஊழியர் ஸ்டீபன், சேகர பொருளாளர் இயேசு ராஜா மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு! | செய்திகள்: சில வரிகளில்| 1.9.25

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

SCROLL FOR NEXT