புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு!
புதுச்சேரியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 20 (இன்று) பதவியேற்றுக் கொண்டனர்.
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தற்காலிக அவைத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வருக்குத் தற்காலிக அவைத்தலைவர் ஏ. அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
ரங்கசாமியைத் தவிர, ஏ.ஐ.என்.ஆர்.சி, பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களுக்கு விருப்பமான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கில மொழிகளில் ஒவ்வொருவராகப் பதவியேற்றனர்.
Advertisement
Advertisement
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, அன்பழகன் அவையின் நடவடிக்கைகளைக் காலவரையின்றி ஒத்திவைத்தார்.
ஏப்ரல் 9 தேர்தலில் ஏ.ஐ.என்.ஆர்.சி தலைமையிலான என்.டி.ஏ வெற்றி பெற்றிருந்தது. முதல்வர் தட்டஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் வெற்றிகரமாகப் போட்டியிட்ட நிலையில், ரங்கசாமி முந்தைய தொகுதியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.