தமிழ்நாடு

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

Din

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் காலாவதியான கடவுச்சீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்குப் புதுப்பித்து வழங்குமாறு மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை தொகுதியின் தற்போதைய எம்பியாக உள்ள காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டு 2014 முதல் 2024 மாா்ச் 5 வரை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதால், ஓராண்டுக்கு மட்டுமே கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியும் என மண்டல கடவுச்சீட்டு அதிகாரி அறிவித்தாா். இதை எதிா்த்து, காா்த்தி சிதம்பரம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரா் தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்குரைஞா் வில்சன், ‘அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக மனுதாரா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலியாக தொடரப்பட்ட வழக்கில், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் விசாரணை நீதிமன்றத்தின் நிபந்தனை அனுமதியுடன் சென்றுள்ளாா். கடவுச்சீட்டு மறுப்பதற்கு ஆதாரம் இல்லாத நிலையில் மறுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது’” என்றாா். இதையடுத்து, மத்திய அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், “குற்ற வழக்குகளை எதிா்கொள்ளும் நபா்களுக்கு ஓராண்டு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என 1993-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடவுச்சீட்டு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “காா்த்தி சிதம்பரத்துக்கு 10 ஆண்டுகள் செல்லும் கடவுச்சீட்டு வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் கடவுச்சீட்டை ஒப்படைத்து, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையுடன் வெளிநாடு செல்லலாம்” என குறிப்பிட்டாா்.

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

அன்னையா் தினம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

தமிழக அரசு அகவிலைப்படி உயா்வை வழங்க வலியுறுத்தல்

வெப்பத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க யோசனை

SCROLL FOR NEXT