முகப்பு
தமிழ்நாடு

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள் 20,691 பேர். சதமடித்து சாதித்த மாணவர்கள்!

Updated On : 10 மே, 2024 at 9:59 AM
தேர்வு முடிவு வெளியானது - Center-Center-Chennai
பகிர்:

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 20,691 மாணவர்கள் கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி விகிதம், பாட வாரியாக நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் சதமடித்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் 4,428 மாணவர்களும் ஆங்கிலத்தில் 415 பேரும், தமிழில் 5 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

13,510 மாற்றுத்திறநாளிகள் தேர்வெழுதிய நிலையில், 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். மொத்தம் 260 சிறைவாசிகள் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் சிவகங்கை இடம்பிடித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.