முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?

ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு அளிக்க கோரிக்கைகள் வரும் நிலையில் ஜேஇஇ நிர்வாகம் பதில்.

Updated On : 6 ஜூன் 2026, 11:58 am IST
ஐஐடி தில்லி - file photo
பகிர்:

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தகுதி பெற்றவர்கள், ஐஐடி சேர்க்கைத் தகுதி தொடர்பான அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

12 ஆம் வகுப்பு மதிப்பெண் பதிவிடுவதில், ஒருமுறை தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ஒருங்கிணைந்த சேர்க்கை வாரியத்தின் (JAB) தலைவரான ஐஐடி ரூர்க்கியின் இயக்குநர் கமல் கிஷோர் பந்த், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு திரையில் மதிப்பெண் வழங்கும் (OSM) முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்கள் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

ஏற்கனவே JEE (Advanced) தேர்வுக்கு தேர்ச்சி பெற்று, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்திருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதன் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களது ஐஐடி சேர்க்கை வாய்ப்பு குறித்து கவலை அடைந்திருக்கிறார்கள்.

ஜேஒஎஸ்ஏஏ கலந்தாய்வு தொடங்கிய நிலையில், ஐஐடி சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்யும் வகையில் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் சரியான நேரத்தில் வந்து சேருமா என்பது குறித்து பல தேர்வர்கள் இன்னும் நிச்சயமற்ற நிலையில் இருந்ததால், இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்தது.

எனவே, நடப்பு ஆண்டின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தகுதி அளவுகோல்களில் ஒரு குறிப்பிட்ட தளர்வை அளிக்குமாறு மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.