புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை(நவ. 15) இயங்காது என அறிவிப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை (நவ. 15) இயங்காது என்று அறிவிப்பு.
புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) நாளை (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி மத்திய அரசு விடுமுறை நாளாகும்.
எனவே நாளை(நவ. 15) ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
எனவே நாளை வெளிப்புற நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.