பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, வருகிற 5-6 ஆம் தேதிகளில் இலங்கை செல்கிறார். அங்கிருந்து தமிழகம் வரும் பிரதமர் மோடி, 6 ஆம் தேதி ராமேசுவரத்தில் பாம்பன் பாலத் திறப்பு விழாவில் பங்கேற்கவிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டுக்கான பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், நாம் தமிழர், தவெக என ஒருபுறம் தனித்தனியாகவும் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Advertisement
Advertisement
அதிமுக - தவெக கூட்டணி அமையும் என நினைத்த வேலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளின் தில்லி பயணம் ஆகியவை கிட்டத்தட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்றவும் தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பேசினர்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது அவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளனர்.
இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விரைவில் கூட்டணி முடிவு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், தனித்தனியே உடைந்து கிடக்கும் அதிமுகவின் அணிகளும் ஒன்றாக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.