கலவரத்தில் கவிழ்க்கப்பட்ட பள்ளிப் பேருந்து  
தமிழ்நாடு

கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு விசாரணை ஆக.8 -க்கு ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி வன்முறை வழக்குத் தொடர்பாக விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வெள்ளிக்கிழமை 41 சிறார்கள் ஆஜராகினர்.

DIN

கனியாமூர் பள்ளி வன்முறை வழக்குத் தொடர்பாக விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வெள்ளிக்கிழமை 41 சிறார்கள் ஆஜராகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 2022, ஜூலை 13-ஆம் தேதி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திலிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டதோடு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. காவல்துறை வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக 53 சிறார்கள் உள்பட 916 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை, காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தது, பசு மாடுகளுக்கு துன்புறுத்தல் அளித்தது, அவற்றை ஓட்டிச் சென்றது, சின்னசேலம் பகுதியில் காவல்துறையின் உயர் அலுவலர்களை வரவிடாமல் தடுத்தது, சில உயர் அலுவலர்களைத் தாக்கியது தொடர்பான வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

இந்த நிலையில் வன்முறை தொடர்பான வழக்கில் 53 சிறார்கள் மீது வழக்குப்பதியப்பட்டிருப்பதால், அவர்கள் மீதான விசாரணை விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய 53 பேரில் 41 பேர் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். 12 பேர் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பிறகு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இளஞ்சிறார் நீதிக்குழும நீதிபதி (பொ) ராஜேசுவரி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT