கடல் சீற்றம்: காரைக்கால் மீனவர்கள் 13வது நாள்களாகக் கடலுக்குச் செல்ல தடை!
கனமழை. கடல் சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தம் பற்றி..
டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் 900-க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் காரைக்கால் மீனவர்கள் 13வது நாளாக கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதால் மீன்பிடி துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வலைகள், படகு இஞ்சின்கள் மீனவர்கள் பத்திரமாகப் பாதுகாத்து எடுத்து வைத்துள்ளன. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. காரைக்கால் மேடு கிளிஞ்சல் மேடு பட்டினச்சேரி உள்ளீட்டு பல்வேறு பகுதிகளில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயலால் காரைக்கால் கடல் கடும் சீற்றம் கடற்கரைப் பகுதியில் பொதுமக்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.