கடலுக்குள் இறங்கிய கார் DPS
தமிழ்நாடு

மதுபோதை + கூகுள் மேப் = கடலுக்குள் இறங்கிய கார்!

கடலூர் அருகே கடலுக்குள் காரை இறக்கியவர்கள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம்: மதுபோதையில் கூகுள் மேப்பை பின்பற்றி காரை இயக்கிய ஓட்டுநர், தவறுதலாக கடலுக்குள் காரை இறக்கியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூர் வழியாக காரில் பயணம் செய்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை சாலையில் வியாழக்கிழமை அதிகாலை கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பின்பற்றி பயணம் செய்துள்ளனர்.

கடலூர், சொத்திகுப்பம் பகுதி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது மதுபோதையில் கடற்கரை மணலில் காரை இறக்கியுள்ளனர்.

4 வீல் டிரைவ் கார் என்பதால், காரை மணலுக்குள் இறக்கி வேகமாக ஓட்டியுள்ளனர். மதுபோதையில் கார் கடலிலும் செல்லும் என நினைத்து, காரை திடீரென கடலுக்குள் ஓட்டியுள்ளனர்.

சிறிது தூரம் கடலுக்குள் சென்ற கார் திடீரென நின்றுவிட்டது. மதுபோதையில் கடலில் தத்தளித்தவர்களை அப்பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

டிராக்டர் உதவியுடன் கார் மீட்பு

பின்னர், காவல்துறையினரின் உதவியுடன் டிராக்டர் மூலம் இவர்கள் பயணம் செய்த கார் கட்டி இழுக்கப்பட்டது. போர் வீல் டிரைவிங் காரினை கடலுக்குள் ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

A drunk driver accidentally drove his car into the ocean while following Google Maps.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்கு கத்தார் பதிலடியும் மூன்றாம் உலகப் போரும்?

திருப்பூரில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்த வீடு!

அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

நேபாள இடைக்கால அரசு: சுசீலா கார்கிக்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு!

கூலி படத்தின் மோனிகா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT