லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்!
லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து....
லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு ஐ.ஜி. துரை குமாரை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த ஏதுவாக அண்மையில் தமிழக தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய உயரதிகாரிகளை நியமித்து, தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Advertisement
இந்த வரிசையில், தமிழக உள்துறைச் செயலராக ஐஏஎஸ் உயரதிகாரி கே. மணிவாசனை நியமித்து தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) தமிழக ஆயுதப்படை தலைமை இயக்குநர் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இயக்குநராக சந்தீப் மிட்டல் என்ற ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்தல் ஆணைய உத்தரவின்படி தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமாா் நியமித்து அரசாணை பிறப்பித்திருந்தார்.
இந்த இரு பொறுப்புகளையும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் நிலையிலான ஐபிஎஸ் உயரதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் வகித்து வந்தார்.
ஏப்ரல் 8ஆம் தேதி தாம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து சந்தீப் மிட்டலை தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை இயக்குநராக நியமிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சனிக்கிழமை புதிய உத்தரவைப் பிறப்பித்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்பை ஐ.ஜி. துரை குமாருக்கு வழங்கி உள்துறைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.