முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது பற்றி...

Updated On : 18 ஏப்ரல் 2026, 11:54 am IST
மக்களவை வளாகத்தில் ராகுல் காந்தி - PTI
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்யும்பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப். 18) சென்னை வந்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்லுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று(ஏப். 18) ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.

Advertisement

Advertisement

தில்லியில் இருந்து சென்னை வந்துள்ள அவர், இங்கிருந்து பொன்னேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

அதன்பின்னர் சோளிங்கர், துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

ராகுல் வருகைக்கு மத்தியில் பிரதமர் மோடியும் இன்று கோவைக்கு வருகை தரவுள்ளார். கோவை கொடீசியா திடலில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.

summary

Rahul Gandhi arrived in Chennai for election campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.