மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மே 20ஆம் தேதி அமேதிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மே 20ஆம் தேதி அமேதிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார் என்று காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரதீப் சிங்கால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கிராமங்கள் முதல் மாவட்ட நிலை வரையிலான பெருமளவிலான கட்சித் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தொண்டர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
வாக்குச்சாவடி மட்டம் வரை கட்சி அமைப்பை வலுப்படுத்துவது, இளைஞர்கள் மற்றும் பெண் தொண்டர்களின் பங்களிப்பை அதிகரிப்பது, மற்றும் கிராமங்கள் முழுவதும் மக்கள் தொடர்புப் பிரசாரங்களை விரைவுபடுத்துவது ஆகியவை ஆலோசனையின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, இந்த சந்திப்பு 2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத் தயாரிப்புகளின் ஒரு பகுதியாகவும், கட்சி அமைப்பை மறுஆய்வு செய்யும் ஒரு முயற்சியாகவும் அமையும் என கருதுகின்றனர்.