அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி
சமூகம் தொடர்பான பிரச்னைகளில் வலுவாகக் குரலெழுப்ப காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தகவல்
சமூகம் தொடர்பான பிரச்னைகளில் வலுவாகக் குரலெழுப்ப காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், தங்கள் சமூகம் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் வலுவாகக் குரலெழுப்ப வேண்டும் என்றும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தப் பாடுபடவும் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஒரு முஸ்லிமுக்கு அநீதி ஏதேனும் இழைக்கப்பட்டால், அவர் ஒரு சிறுபான்மையைச் சேர்ந்தவர் என்ற முறையில் குரலெழுப்பாமல், முஸ்லிம் என்ற முறையில் குரலெழுப்ப வேண்டும் என்று அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
முஸ்லிம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தயங்கக் கூடாது என்பதே ராகுல் காந்தி கூற முயல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.