முகப்பு
தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்! ராஜ்நாத் சிங்

திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாக ராஜ்நாத் சிங் பேசியது குறித்து...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:39 PM
ராதாபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - எக்ஸ் / Rajnath Singh
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:32 PM

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப். 19) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

Advertisement

திமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மக்கள் நலத் திட்டங்களின் பெயரில் ஊழல் செய்திருக்கின்றனர். சிலர் சிறைக்கும் சென்றுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்ததும் தடை விதிக்கப்பட்ட இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நரேந்திர மோடி தமிழக மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளார். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி உறுதி அளித்துள்ளார்.

summary

TN election 2026 Minister Rajnath Singh campaign in nellai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.