மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!
மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம் மேற்கொண்டது குறித்து..
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை (ஏப்.25) சாலைவலம் மேற்கொண்டார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்டமாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 27 அன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது.
Advertisement
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்றோர் மக்களிடையே தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முன்னதாக, பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்ரல் 24) அங்குள்ள கங்கையின் கிளை நதியான ஹூக்ளி நதியில் படகுசவாரி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஹூக்ளி மாவட்டம், கோகாட் என்னும் பகுதியில் திரளான மக்களுக்கு நடுவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாலைவலம் மேற்கொண்டார்.