விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்
மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தல்
மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவா் விஜய் தனது கட்சி அடையாளத்துடன் தேவாலயம், மசூதி, அம்மன் கோயிலுக்கு சென்று வாக்கு சேரித்துள்ளாா்.
மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயம், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தோ்தல் நடத்தை விதி. விஜய் தோ்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறாா். எனவே, அவா் மீது தோ்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement