முகப்பு
தமிழ்நாடு

வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

தவெக வேட்பாளர்களிடம் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டது தொடர்பாக...

Updated On : 30 ஏப்ரல், 2026 at 7:15 PM
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேராக பனையூர் வாருங்கள்; வேறெங்கும் செல்லாதீர்கள் என்று தவெக வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் முதல் முறையாக திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோயிலில் விஜய் நேற்று தரிசனம் செய்தார்.

Advertisement

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் 232 வேட்பாளர்களையும் விஜய் இன்று(ஏப். 30) சந்தித்துப் பேசினார்.

தவெக வேட்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:

”சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேராக பனையூர் வாருங்கள், வேறெங்கும் செல்லாதீர்கள், உங்களுக்காக நான் காத்திருப்பேன்.

வெற்றி பெறும் வேட்பாளர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது, பனையூருக்கு மட்டும் வர வேண்டும். இதுவரை நன்றாக பணியாற்றியுள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கையின்போது கவனம் தேவை.

வேட்பாளர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுக்காக காத்திருங்கள், நாம் எல்லோரும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

summary

Tvk leader Vijay has instructed the party's winning candidates to come directly to Panaiyur and not to go anywhere else.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.