குழந்தைகள் மூலம் தவெக தேர்தல் பிரசாரமா? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
தேர்தலில் குழந்தைகள் மூலம் தவெக பிரசாரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெக பிரசாரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களிக்க தங்களின் பெற்றோரிடம் குழந்தைகள் அனைவரும் அடம்பிடிக்க வேண்டும் என்று தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் பிரசாரத்தின்போது வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, பிரசாரத்தில் சிறார்களை ஈடுபடுத்தியதாக தவெக மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தவெக மீதான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.