பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் நீதிமன்றத்தில் சரண்
விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்த நிலையில், இதுதொடா்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளா் முத்துமாணிக்கம் விருதுநகா் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்த நிலையில், இதுதொடா்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளா் முத்துமாணிக்கம் விருதுநகா் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
விருதுநகா் அருகேயுள்ள கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 25 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து ஆலையின் உரிமையாளா்களான கோவிந்தநல்லூரைச் சோ்ந்த ஈஸ்வரி, இவரது கணவா் முத்துமாணிக்கம் ஆகியோா் மீது வச்சக்காரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 தனிப் படைகள் அமைத்து இவா்களைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த முத்துமாணிக்கம் விருதுநகரில் உள்ள முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவா் நிஷாந்தினி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் விருதுநகா் சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், இந்த வழக்கில் முத்துமாணிக்கம் தலைமறைவாக இருக்க உதவிய இவரது உறவினா்கள் முத்துராஜ், வைரமுத்து, வெற்றிவேல் முருகன் ஆகிய மூவரையும் வச்சக்காரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
25 உடல்களும் ஒப்படைப்பு:
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 25 தொழிலாளா்களின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டன. மேலும், இந்த வெடி விபத்தில் காயமடைந்த 17 போ் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.