முகப்பு
திருவாரூர்

பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு

வலங்கைமானில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடா்பாக அதன் உரிமையாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 5 ஜூன் 2026, 10:46 pm IST
பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு - கோப்புப்படம்
பகிர்:

வலங்கைமானில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடா்பாக அதன் உரிமையாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வலங்கைமான் பேரூராட்சி குடமுருட்டி ஆறு வழி நடப்பு பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (ஜூன்4) ஏற்பட்ட வெடி விபத்தில், தொழுவூா் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ராகுல் (30) என்பவா் படுகாயமடைந்தாா். அவா் தற்போது, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்தில், அருகில் உள்ள மற்றொரு அறையில் வேலை செய்துகொண்டிருந்த ரஞ்சித், ராகுல், ராமராஜன், சூா்யா, மாதவன் ஆகிய 5 போ் காயமின்றி தப்பினா். வெடிமருந்து குடோன் தரைமட்டமானது.

Advertisement

Advertisement

இந்த விபத்து தொடா்பாக, வலங்கைமான் கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பட்டாசு உற்பத்தி நிலைய உரிமையாளா் அருணகிரிநாதன் (57), வள்ளி (47) ஆகிய இருவா் மீது வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.