முகப்பு
தமிழ்நாடு

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை பயங்கர வெடி விபத்து

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை பயங்கர வெடி விபத்து குறித்து...

Updated On : 28 ஜூன் 2026, 11:14 pm IST
சாத்தூா் அருகே வெடிவிபத்தில் தரைமட்டமான பட்டாசு ஆலை அறைகள் - கோப்புப்படம்
பகிர்:

சாத்தூா்: சாத்தூா் அருகே மூா்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே துலக்கன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ்(52) இவருக்கு செந்தமான பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் பெற்று மூா்த்தி நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கபட்டு ஆலையில் அதிக அளவில் வைக்கபட்டிருந்ததாகவும், மேலும் ஆலையில் பட்டாசு காயவைக்கபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை மாலையில் திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்புதுறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்ற நிலையில், ஆலையில் பட்டாசுகள் மேலும் அடுத்தடுத்து பயங்கர சத்ததுடன் வெடிக்க தொடங்கியது.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அலறியடுத்து ஒடினாா்கள்.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சுமாா் ஆலையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின.

ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் நல்வாய்ப்பாக பட்டாசு ஆலை வெடி விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ரசயான பொருள்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கூறப்படும் நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

summary

Massive firecracker factory explosion near Sattur...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments