சிதம்பரம்: திருமணக் கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்!
சிதம்பரத்தில் திருமணம் முடிந்த பின் வாக்களிக்க வந்த மணப்பெண்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்தில், திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை பாஜக முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத்தலைவர் கேப்டன் பாலசுப்பிரமணியம் மகள் அக்க்ஷயா- மணிகண்டன் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு அண்ணாமலை பல்கலைக்கழக கோகலை ஹாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு மணப்பெண் அக்க்ஷசயா மனக்கோளத்துடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார்.
Advertisement
summary