முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது பற்றி...

Updated On : 10 ஜூன் 2026, 10:01 am IST
சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது - Dinamani
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனம் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் காயமின்றி அப்புறப்படுத்தப்பட்டனர்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றுக்கொண்டு பள்ளிப்படை அருகே இன்று காலை சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென வேனின் முன்புறம் என்ஜினில் இருந்து புகை ஏற்பட்டு அங்குள்ள ஒயர்கள் தீ பிடித்தது. உடனடியாக வேன் நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் வேனில் இருந்த மாணவர்களை கீழே இறக்கி அப்புறப்படுத்தினர்.

Advertisement

Advertisement

இதனால் மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் சிதம்பர நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

summary

Private school vehicle catches fire near Chidambaram; students escape!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.