திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வரும் நிலையில், திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திமுக தேர்தல் ஊடக ஒருங்கிணைப்பு அறைக்கு திடீரென வந்த முதல்வர் ஸ்டாலின், கள நிலவரம், செயல்பாட்டு நடைமுறைகளைக் கேட்டறிந்தார்.
தேர்தல் களத்தைக் கையாள, நிர்வாகிகளுக்கான சந்தேகங்களை தீர்ப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளைக் கையாள திமுக சார்பில் அமைக்கப்பட்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
Advertisement