திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!
சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) காலை 8 மணிக்கு தொடங்கும்
திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு நாளை(ஏப். 26) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - தாம்பரம் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (எண் : 06192) திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலையில் தாம்பரத்தைச் சென்றடையும்.
இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
summary