திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!
சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) காலை 8 மணிக்கு தொடங்கும்
திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு நாளை(ஏப். 26) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - தாம்பரம் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (எண் : 06192) திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலையில் தாம்பரத்தைச் சென்றடையும்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் 12, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 ஆகியவற்றுடன் இந்த ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Special train, Train No. 06192 Tiruchchirappalli – Tambaram One Way Express Special on April 26
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.