மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?
தேர்தல் வாக்கு முடிவுகள் நாளில் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்வது குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு முடிவுகள் நாளில் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்தது.
தேர்தல் முடிந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் குடும்பத்துடன் துபை சென்றுள்ளார்.
Advertisement
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் மே 4 ஆம் தேதியில் தவெக தலைவர் விஜய்யும் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.
விஜய், படங்களில் நடித்தபோது, ஒவ்வொரு படப்பிடிப்பு முடிவின்போதும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளிலும் ஆஸ்திரேலியா செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும், தேர்தலில் தோல்வியைத் தழுவினால் மட்டுமே ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாகவும், இல்லையெனில் பயணத்தை ரத்து செய்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆகையால், தேர்தல் முடிவுகளைப் பொருத்தே, விஜய்யின் ஆஸ்திரேலியா பயணம் முடிவாகும் என்று தெரிகிறது.