சீரடி புறப்பட்டார் விஜய்!
சீரடி சாய் பாபா கோவிலுக்கு புறப்பட்டார் விஜய்...
மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோவிலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதன்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது.
வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisement
நேற்று (ஏப். 28) காலை திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் சீரடி சாய் பாபா கோவிலுக்குச் செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, பலமுறை சீரடி சாய் பாபா கோவிலுக்குச் சென்று விஜய் தரிசனம் செய்துள்ளர். கடைசியாக தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவும், தவெக முதல் மாநாட்டுக்கு முன்னதாகவும் விஜய் சீரடி சென்றது குறிப்பிடத்தக்கது.