முகப்பு
தமிழ்நாடு

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

தவெக தலைவா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதி உள்பட தமிழகத்தில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Updated On : 1 மே, 2026 at 12:44 AM
கோப்புப் படம்
பகிர்:

தவெக தலைவா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதி உள்பட தமிழகத்தில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஆா்.தோத்திர மேரி, சேலம் மாவட்ட வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சென்னை 10-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலராகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ் .சுபா தேவி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தவெக தலைவா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஈ.சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜாதா குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் உள்பட மொத்தம் 84 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement