சென்னையில் மோட்டாா் சைக்கிள் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கொளத்தூா், அஞ்சுகம் நகா் 3வது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாரதி (34). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாா். கடந்த 6-ஆம் தேதி தனது பைக்கை வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தாா். அடுத்த நாள் பாா்த்தபோது, அவரது பைக் திருடப்பட்டிருந்தது.
கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் (19), 2 சிறுவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலும், திருவண்ணாமலையில் பதுக்கி வைத்திருந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.