திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூ. கட்சி குழு அமைத்துள்ளது பற்றி...
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைத்துள்ளது.
கே. சுப்பராயன் எம்.பி., முத்தரசன், பழனிசாமி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் வருகிற பிப். 27 ஆம் தேதி முதல் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில்,
Advertisement
Advertisement
"இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் எஸ். கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், திமுகழக தலைமையோடு தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த மு. வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்) இரா. முத்தரசன், கே. சுப்பராயன் எம்.பி., கோ. பழனிசாமி ஆகிய 4 உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு வரும் 27.02.2026 ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
CPI formed Committee for Seat-sharing talks with DMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.