மு. வீரபாண்டியன் கோப்புப் படம்
தமிழ்நாடு

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூ. கட்சி குழு அமைத்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைத்துள்ளது.

கே. சுப்பராயன் எம்.பி., முத்தரசன், பழனிசாமி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் வருகிற பிப். 27 ஆம் தேதி முதல் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில்,

"இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் எஸ். கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், திமுகழக தலைமையோடு தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த மு. வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்) இரா. முத்தரசன், கே. சுப்பராயன் எம்.பி., கோ. பழனிசாமி ஆகிய 4 உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு வரும் 27.02.2026 ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

CPI formed Committee for Seat-sharing talks with DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

SCROLL FOR NEXT