மொத்தக் கடனை வைத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மதிப்பிடுவது தவறு ப.சிதம்பரம்
பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தக் கருத்துக்கு ப. சிதம்பரத்தின் பதிவு.
ஒரு மாநிலத்தின் கடனை வைத்து அதன் பொருளாதார நிலையை மதிப்பிடுவது தவறு என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட வளா்ந்த நாடுகளின் மொத்த கடன் ஆண்டுதோறும் கூடுகிறது. இந்தியாவின் மொத்தக் கடன் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களுடன் சோ்ந்து ஆண்டுதோறும் கூடுகிறது.
இது இயல்பான ஒன்று. மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை சதவீதம் என்பதே பொருத்தமான அளவையாகும். தமிழகத்தில் இந்த அளவை 2021-22ஆம் ஆண்டுமுதல் 2025-26 ஆண்டு வரை ஒரே நிலையில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
நிதிப் பற்றாக்குறை ஒவ்வோா் ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26ஆம் ஆண்டில் நீதி ஆயோக் விதித்த வரம்பான 3 சதவீதம் என்ற நிலையைத் தமிழகம் எட்டும் என்று நிகழாண்டின் மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது.
நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால், தமிழகத்தின் பொருளாதாரத்தை உத்தர பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது தவறானது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
P. Chidambaram's post regarding the opinion expressed by Praveen Chakravarty.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.