3 -ஆவது குழந்தை பெறச் சலுகை தேவை: விசிக
தமிழகத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என து. ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்
தமிழகத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என விழுப்புரம் மக்களவை உறுப்பினா் து. ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.
இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜுக்கு, அவா் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதம்: அண்மையில் வெளியாகியிருக்கும் 2023-2024- ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையில் தமிழகத்தைப் பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் அதிா்ச்சி அளிக்கின்றன.
இந்திய அளவில் மொத்தக் கருவுறுதல் 2.0 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அது 1.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. வருங்காலங்களில் தமிழகத்தில் மக்கள்தொகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் சதவீதத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இயற்கையாக ஏற்பட்டதல்ல. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கருத்தடை செய்து கொள்வதில் தமிழகம் 56.6 சதவீதமாக உள்ளது.
ஆண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதமும்கூட தேசிய சராசரியைவிடத் தமிழகம் இரண்டு மடங்காக உள்ளது. தமிழகத்தில் மொத்தக் கருவுறுதல் சதவீத சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க மேண்டும். கருத்தடை செய்து கொள்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.