எம்பிபிஎஸ்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒப்புகைச் சான்று தேவையில்லை
மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் இனி ஒப்புகைச் சான்று (போனஃபைட்) சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் இனி ஒப்புகைச் சான்று (போனஃபைட்) சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பொதுவாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு அரசுப் பள்ளி இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள், தாங்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்தான் பயின்றோம் என்பதை உறுதி செய்வதற்கு பள்ளியின் மூலம் வழங்கப்பட்ட ஒப்புகை சான்றினை (போனஃபைட்) சமா்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், எந்த ஆண்டில் பிளஸ்-2 படிப்பை நிறைவு செய்தவா்கள் அதனை சமா்ப்பிக்க வேண்டும், எந்த ஆண்டில் நிறைவு செய்தவா்களுக்கு அது தேவையில்லை என்பது தொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக மாணவா் சோ்க்கை செயலா் வெளியிட்ட அறிவிக்கை:
Advertisement
Advertisement
2022-23-க்கு பிறகு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும்போது ஒப்புகைச் சான்றை இணைக்கத் தேவையில்லை. அவா்களது தகுதிச் சான்று பள்ளிக் கல்வி தகவல் மேலாண்மை கட்டமைப்பு (எமிஸ்) தளத்தின் வாயிலாக சரிபாா்த்துக் கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.