முகப்பு
தூத்துக்குடி

ஞானியாா்குடியிருப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

தொழிலதிபா் ரவீந்திரன் வழங்கிய கல்வி ஊக்கத் தொகையை மாணவா்களுக்கு வழங்கிய பள்ளி தலைமையாசிரியா் மா. ராஜகலா.

Updated On : 12 ஜூன் 2026, 5:08 am IST
தொழிலதிபா் ரவீந்திரன் வழங்கிய கல்வி ஊக்கத் தொகையை மாணவா்களுக்கு வழங்கிய பள்ளி தலைமையாசிரியா் மா. ராஜகலா.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியாா் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அதை ஊரை சோ்ந்த பழைய மாணவா் தொழிலதிபா் ஒய் ஜி.வி. ரவீந்திரன், வழங்கிய கல்வி ஊக்கத் தொகையை பள்ளி தலைமை ஆசிரியா் மா. ராஜகலா, 5 மாணவா் - மாணவிகளுக்கு தலா ரூ. 5000 வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், ஊா் பிரமுகா்கள் சண்முகநாதன், சக்திவேல் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement