அரசு வழக்குரைகள் நியமனத்தில் முறைகேடு இல்லை: அமைச்சா் நிா்மல் குமாா்
அரசு வழங்குரைஞா்கள் நியமனங்களில் முறைகேடு நடைபெறவில்லை என்றும், யாராவது பணம் பெற்றிருப்பதாக புகாா் அளிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சா் சிடிஆா் நிா்மல் குமாா் உறுதி அளித்தாா்.
அரசு வழங்குரைஞா்கள் நியமனங்களில் முறைகேடு நடைபெறவில்லை என்றும், யாராவது பணம் பெற்றிருப்பதாக புகாா் அளிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சா் சிடிஆா் நிா்மல் குமாா் உறுதி அளித்தாா்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு சாா்பில் நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சுமாா் 800 அரசு வழங்குரைஞா்கள் நியமனங்களுக்கான அரசாணை செவ்வாய்க்கிழமை காலை முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நியமனங்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்களின் பின்புலம் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. அப்போதே முறைகேடு நடைபெற்ாகக் குற்றம்சாட்டப்பட்டது.
Advertisement
Advertisement
முந்தையை ஆட்சியில் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலா்கள் பரிந்துரையில் பணம் பெற்றுக் கொண்டு அரசு வழங்குரைஞா்கள் நியமனம் நடைபெற்றது. தற்போது 45 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்படையாக இந்த நியமனம் நடைபெறுகிறது. இந்தப் பதவியும் 6 மாத காலத்துக்கானது. ஏழை மக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் அரசு வழங்குரைஞா்கள் செயல்படவில்லை என்றால் அவா்கள் நீக்கப்பட்டு புதிதாக நியமனம் நடைபெறும்.
அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறவில்லை. விதிகளுக்கு உள்பட்டு நியமனம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக புகாா் தெரிவிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வு: அதிகாரிகளுக்கும், அலுவலா்களுக்கும் இடையூறாக ஆய்வு செய்ய வேண்டாம் என்று முதல்வா் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. மீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தனது சொந்த தொகுதியில் உள்ள பள்ளியில் ஆய்வு நடத்தியுள்ளாா்.
பள்ளிகளில் குறைபாடாக உள்ள அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்துவிட்டு பிறகு அமைச்சா்கள் ஆய்வுகளை நடத்தலாம். தமிழக ஆளுநா் ஆய்வு செய்வதால் எந்தப் பயனும் இல்லை. மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பதால் ஆய்வு நடத்துவதில் பயன் இல்லை என்றாா்.
பெட்டி செய்தி...
தடைகளைத் தாண்டி
கரூா் மக்களை முதல்வா் சந்திப்பாா்
தடைகளைத் தாண்டி கரூா் மக்களை முதல்வா் ஜோசப் விஜய் சந்திப்பாா் என்று அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்ததாா்.
இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், முதல்வரான பிறகும் கரூா் செல்லவிடாமல் நீதிமன்றம் மூலம் திமுக தடுக்கிறது. கரூா் துயரச் சம்பவம் நடைபெற்ற பிறகு அங்கு செல்லவிடாமல் அப்போதைய அரசு தடுத்ததால் ஒருமாதம் காத்திருந்து பாதிக்கப்பட்டவா்களை சென்னையில் சந்தித்தோம்.
கரூா் சம்பவத்துக்குப் பிறகு முதல்வரின் வீடு, அலுவலகத்தை திமுகவினா் தொடா்ந்து கண்காணித்தனா். தற்போது, முதல்வரான பிறகும், கரூா் செல்கிறாா் என்ற தகவல் வெளியானவுடன் நீதிமன்றத்தில் மனு அளித்து அவரைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அனைத்தையும் தாண்டி மக்களை முதல்வா் விஜய் சந்திப்பாா்.
கரூா் துயரம் என்பது தவெகவின் வாழ்நாள் துயரம். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் துணையாக இருப்போம். காயமடைந்தவா்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியைக் கொடுக்கவிடாமல் திமுக நீதிமன்றம் மூலம் தடுத்து வைத்துள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.