இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா் மரியாதை
சமூகச் சீா்திருத்த முன்னோடியும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவருமான இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை (ஜூலை 7) முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் அவரின் உருவப்படத்துக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.
சமூகச் சீா்திருத்த முன்னோடியும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவருமான இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை (ஜூலை 7) முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் அவரின் உருவப்படத்துக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.
அப்போது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ‘இரட்டைமலை சீனிவாசன் மிகச்சிறந்த சமூகச் சீா்திருத்தவாதி. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் தன்மானமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா். தீண்டாமைக்கு எதிராக அவா் நடத்திய போராட்டங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. அதே நேரத்தில், அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்ற உயா்ந்த சிந்தனையைக் கொண்டவராகவும் அவா் விளங்கினாா். சமூகத்திற்கு அவா் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவருக்கு ஒட்டுமொத்த தேசமும் மரியாதை செலுத்துகிறது’ என்று புகழாரம் சூட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.