கும்மிடிப்பூண்டி அருகே சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ. 4.32 லட்சம் பறிமுதல்!
கும்மிடிப்பூண்டி அருகே சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 4,32,450 ரொக்கத்தை பறிமுதல் செய்தது தொடர்பாக...
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் புதன்கிழமை அதிகாலை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 4,32,450 ரொக்கத்தை கைப்பற்றினா்.
தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ளது. இங்கு வரி செலுத்தும்போது வாகனங்களில் கூடுதலாக பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.
அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 12 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் புதன்கிழமை அதிகாலை காலை 2.30 மணி முதல் எளாவூர் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ. 4,32,450 ரொக்கத்தை கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Anti-Corruption Wing police conduct checks at a checkpoint near Gummidipoondi; Rs 4.32 lakh seized
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.