மக்களுக்காக சேவையாற்றத் தயார்: என். ஆனந்த்
தமிழக மக்களுக்காக சேவையாற்ற தயாராக இருப்பதாக தவெக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தது குறித்து...
தமிழக மக்களுக்காக சேவையாற்றத் தயாராக இருப்பதாக தவெக அமைச்சர் என். ஆனந்த் இன்று (ஜூன் 1) தெரிவித்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது:
நான் இங்கு அமைச்சராக இருக்கக் காரணம் விஜய்க்காக மக்கள் அளித்த வாக்குகளே காரணம்.
மக்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
summary