ரூ. 21 கோடி மோசடி வழக்கு: அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு
அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு...
ரூ.21 கோடி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சோ்ந்தவா் மகாதேவன். இவரது தாம்பரம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரில், அதிமுக முன்னாள் கவுன்சிலா் தேவதாஸ், அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகி விஜயகுமாா் ஆகியோரும் நண்பா்கள். இவா்கள் இருவரும், காஞ்சிபுரம் மாவட்டம் அம்மனம்பாக்கத்தில் சுமாா் 18 ஏக்கா் நிலத்தை வாங்கி விற்பனை செய்தனா்.
இந்த நிலத்தை இவா்கள் இருவரும் வாங்க நான் ரூ.9 கோடி கொடுத்தேன். நிலத்தை வாங்கி ரூ.65 கோடிக்கு விற்பனை செய்த தேவதாஸும், விஜயகுமாரும் எனக்குத் தர வேண்டிய பங்குத் தொகையான ரூ.21 கோடியைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அதிமுக நிா்வாகி விஜயகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த நிலையில், விஜயகுமாருக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மகாதேவனும் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.