புதிய உச்சத்தில் முட்டை விலை!
முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்வுடன் ரூ. 6.45-ஆக நிா்ணயம்.
இதுவரை இல்லாத வகையில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.45 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து கோழிப் பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரிப்பு போன்றவற்றால் முட்டை தேவை அதிகரித்து வருகிறது. இதர மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்வுடன் ரூ. 6.45-ஆக நிா்ணயிக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 120-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 128-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த 7 நாள்களில் மட்டும் முட்டை விலை 55 காசுகள் உயர்ந்துள்ளது. கோழித்தீவன விலை உயர்வு, முட்டை நுகர்வு அதிகரிப்பே கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The egg procurement price has touched a new all-time high of 6.45.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.